ஓடி வந்து,
வீழ்ந்து கலந்து விடும்
'மழைத்துளியின் ஆசையும் வேகமும்'
எனக்குமுண்டு உன்மேல்!
எப்போதாவது நிகழும் ஒரு புன்னகையும்,
அதற்கு பின்பான சிறு உரையாடலும் கூட
அதிகம் பிடித்திருக்கிறது!!!
அடிக்கடி கேட்பாய்,
என் கவிதைகளில் ஒளிந்திருக்கும் 'தேவதைகளின் தேவதை' யாரென்று?
நான்... "நீதான்" என்று சொல்லாமல் மெல்ல புன்னகைப்பேன்!
உனக்கு தெரியாதடி, அப்போதெல்லாம் எனக்கு உணர்வுகளை வார்த்தைகளாக வெளியிடும் லாவகம் கூடியிருக்கவில்லை!
அது கூடும் போது சொல்கிறேன்!
அதுவரை வைத்துக் கொள் "ஒரு புன்னகை"

நினைவேறுகிறது…